நேற்று இரவு திடீரென ஓர் எண்ணம். நாளை முதல் எனக்கான புதிய ஆண்டு தொடங்குகிறது என. அதாவது புதிய நிதியாண்டு (ஏப்ரல் 2018) தொடங்குவதைத்தான் அப்படி நினைத்துக் கொண்டேன். இதுவரையிலான எனது வாழ்வில் பல நிதியாண்டுகள் கடந்து போயிருந்தாலும், முதன்முறையாக அதை ஒரு புத்தாண்டாக அணுகும் அளவுக்கு மனம் அதுகுறித்த பிரக்ஞையுடன் இருந்தது எனக்கே விசித்திரமாக இருந்தது.
இதற்கான காரணம் தெளிவானது. குறைந்தது கடந்த மூன்றரை ஆண்டுகளாக இந்திய பங்கு சந்தையை அனேகமாக அது செயல்பட்ட அனைத்து நாட்களிலும் கவனித்து வந்திருக்கிறேன். சிறிய இடைவெளிகள் தவிர பெரும்பாலான நாட்களில் சிறிய அளவிலேனும் வணிகத்தில் ஈடுபட்டிருக்கிறேன். குறிப்பாக எனது ஐடி வேலையை விட்ட பிறகு கடந்த நான்கு மாதங்களாக பங்கு சந்தை வணிகத்தை மட்டுமே எனது பொருளியல் வாழ்வுக்கான அடிப்படையாக வகுத்துக் கொண்டிருக்கிறேன். நான் ஏதேனும் ஒரு தொழில் குறித்து உறுதியாக சில கருத்துகள் சொல்ல இயலும் என்றால் அது பங்கு வர்த்தகம் குறித்தே. எனவே மனம் அதுகுறித்த விழிப்புடன் இருந்ததில் ஆச்சரியமில்லை.
கடந்த நவம்பர் இறுதியில் இம்முடிவை எடுக்கும் போதே நான்கு மாதங்கள் கழித்து எனது பங்கு வர்த்தகத்தில், அதையே பிரதான தொழிலாக கைக்கொள்ளும் முடிவில் எந்தளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறேன் என்பதை தீவிரமாக சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என எண்ணியிருந்த்தேன். மார்ச் மாதத்துடன் நான்குமாதம் நிறைவடைந்தது. இந்த சோதனை காலகட்டத்தின் முடிவகள் எனக்கு ஊக்கமளிப்பதாகவே உள்ளது. மேலும் பங்கு வர்த்தகத்தையே எனது பொருளியல் வாழ்வுக்கான அடிப்படையாகக் கொள்ளலாம் எனும் எண்ணம் இன்றைய நிலையில் மேலும் வலுவாக உள்ளது. இந்த சோதனை காலகட்டம் குறித்த விரிவான முடிவுகளை பின்னர் எழுதுகிறேன்.
கடந்த நவம்பர் இறுதியில் இம்முடிவை எடுக்கும் போதே நான்கு மாதங்கள் கழித்து எனது பங்கு வர்த்தகத்தில், அதையே பிரதான தொழிலாக கைக்கொள்ளும் முடிவில் எந்தளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறேன் என்பதை தீவிரமாக சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என எண்ணியிருந்த்தேன். மார்ச் மாதத்துடன் நான்குமாதம் நிறைவடைந்தது. இந்த சோதனை காலகட்டத்தின் முடிவகள் எனக்கு ஊக்கமளிப்பதாகவே உள்ளது. மேலும் பங்கு வர்த்தகத்தையே எனது பொருளியல் வாழ்வுக்கான அடிப்படையாகக் கொள்ளலாம் எனும் எண்ணம் இன்றைய நிலையில் மேலும் வலுவாக உள்ளது. இந்த சோதனை காலகட்டம் குறித்த விரிவான முடிவுகளை பின்னர் எழுதுகிறேன்.
சரி, இந்த நிதியாண்டு ஒரு தொடக்கமாக அமையட்டும் என எண்ணிக்கொண்டேன். இனி பங்கு சந்தை குறித்த எனது அனுபவங்கள் இங்கு பதியப்படும். இது முக்கியமாக இத்தொழிலில் எனது வளர்ச்சிப்போக்கை நானே அவதானிக்க பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். இவ்வலைப்பூவின் பிரதான நோக்கமே அதுதான்.
எனது வாசிப்பு, பயணம், அனுபவங்கள் குறித்து தனியாக ஒரு வலைப்பூ தொடங்கும் எண்ணமுள்ளது. இங்கு எனது பங்குசந்தை அனுபவங்கள் குறித்து மட்டும்..

No comments:
Post a Comment